சொகுசு கார் விபத்து சினிமா பாணியில் தப்பிய குற்றவாளி!
Jan 14, 2026, 03:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொகுசு கார் விபத்து சினிமா பாணியில் தப்பிய குற்றவாளி!

Murugesan M by Murugesan M
Jul 11, 2024, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பையில் BMW கார் விபத்தில் தொடர்புடையவரும் அவரது குடும்பத்தினரும் சினிமா பாணியில் தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகாராஷ்ட்டிர மாநிலம் மும்பையில் உள்ள வோர்லி பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒரு தம்பதி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் அதிவேகமாக வந்த BMW சொகுசு கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த சம்பவத்தில் கணவர் பிரதீப் நகாவா இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து தப்பித்தாலும், மனைவி காவேரி காரின் BONNET-ல் சிக்கிக் கொண்டார். கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் அவரை இழுத்துக் கொண்டே சாலையில் வேகமாகச் சென்றது அந்த கார். வியாபாரத்துக்காக மீன் வாங்கிக் கொண்டு கணவருடன் சென்ற தமக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என காவேரி நினைத்திருக்க மாட்டார். இந்த கொடுமை நிகழ்ந்தது ஜூலை ஏழாம் தேதி.

காவேரி மீது அதிவேகமாக மோதிய காரை ஓட்டிய இளைஞரின் பெயர் மிஹிர் ஷா. அவரது தந்தை ராஜேஷ் ஷா, மகாராஷ்ட்ர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர். பணபலமும் அதிகார பலமும், மதுவும் கொடுத்த மயக்கத்தில் சொகுசுக் காரை அதிவேகமாக இயக்கி இருசக்கர வாகனத்தை அடித்து தூக்கியுள்ளார் மிஹிர் ஷா.

அப்போது CAR BONNET-ல் சிக்கிய காவேரியை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றுள்ளார். பின்னர் வண்டியை நிறுத்திவிட்டு, உயிருக்கு போராடிய காவேரியை BONNET-ல் இருந்து விடுவித்து சாலையில் கிடத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து மிஹிர் ஷாவுக்கு பதிலாக உடன் இருந்த அவரது ஓட்டுநர் காரை இயக்கியுள்ளார். பின்னர் ரிவர்ஸ் எடுக்கும் போது காவேரி மீது காரை ஏற்றியுள்ளனர். பிறகு மற்றொரு காரில் மிஹிர் ஷா அங்கிருந்து தப்பியுள்ளார்.

கோரேகானில் உள்ள காதலி வீட்டுக்கு மிஹிர் ஷா சென்றவுடன், அவரது வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அங்கு வந்த மிஹிர் ஷாவின் சகோதரி வேறோரு காரில் அவரை தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் மிஹிர் ஷா, அவரது தாய், இரண்டு சகோதரிகள், நண்பர் என 5 பேரும் மும்பையிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷாபூரில் இருக்கும் ரிசார்ட்டுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மிஹிர் மட்டும் தனது நண்பருடன் மும்பையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தானேவின் விரார் பகுதிக்கு சென்று பதுங்கியுள்ளார்.

ஐவரும் செல்போன்களை OFF செய்துவிட்டனர். மிஹிர் நண்பரின் போனை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் செவ்வாய்கிழமை அதிகாலை மிஹிரின் நண்பர் தனது போனை 15 நிமிடத்துக்கு ஸ்விட்ச் ஆன் செய்ததால் அவர்களது மறைவிடத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இதனையடுத்து மிஹிர் ஷா உட்பட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மிஹிர் ஷாவுக்கு 16-ஆம் தேதி வரை போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மிஹிரின் தந்தை ராஜேஷ் ஷா ஜாமீனில் வெளிவந்துள்ளார். எனினும் அவர் சிவசேனா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மிஹிர் ஷாவுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என காவேரியின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மீன் வியாபாரியான காவேரியின் கணவர் பிரதீப் நகாவாவின் கதறல் அரபிக்கடல் அலையோசையையும் தாண்டிக் கேட்கிறது. காவேரி குடும்பத்தினரின் கண்ணீருக்கு நியாயம் கிடைத்தால் சரி.

Tags: Luxury car crash movie-style escaped convict!
ShareTweetSendShare
Previous Post

நாளை ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர்கள் கூட்டம்!

Next Post

ஒரு பூச்சியோட விலை ரூ.75 லட்சமா?

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies