ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3வது டி-20 போட்டியில் இந்தியா அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.