டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் திருப்பூர் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது.
158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்றது.