விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை வெற்றி பெற்றுள்ளார்.
லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினாவுடன், உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா மோதினார்.
இந்த ஆட்டத்தில் 6-3,6-2 என்ற நேர் செட் கணக்கில் எலினா ரைபகினா வெற்றி பெற்றார். இதன் மூலம் இவர் அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார்.