தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் குடும்ப பிரச்னை காரணமாக குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற கணவனால் பரபரப்பு ஏற்பட்டது.
பி.என் ரெட்டி நகரைச் சேர்ந்த கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த கனவன் தனது 3 குழந்தைகளையும் காரில் ஏற்றிக்கொண்டு அப்பகுதியில் உள்ள ஏரிக்குள் காரை இறக்கினார்.
இதைக்கண்ட பொதுமக்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.