காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகையை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
அப்போது குற்ற பின்னணி கொண்ட ஒருவரை காங்கிரஸ் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுத்த ராகுல் காந்தியை கண்டித்தும் பாஜகவினர் கோஷங்களை எழுப்பினர். மேலும் செல்வப்பெருந்தகையின் உருவ எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.