தென்காசி அருகே கண்ணிமைக்கும் நேரத்தில் பெண் ஒருவர் தங்கச் செயினை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சுரண்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் ஜுவல்லரி கடைக்கு, சிறுவனுடன் பெண் ஒருவர் நகை எடுப்பது போல வந்துள்ளார்.
அப்போது புதிய வகை மாடல் செயின்களை கடைக்காரர் காட்டி கொண்டிருக்கும்போதே, 12 கிராம் தங்கச் செயினை அப்பெண் திருடிச் சென்றுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.