அழகு முத்து கோன் வாழ்க்கை வரலாற்றை தமிழக பாட புத்தகத்தில் கொண்டு வர வேண்டும்!- அண்ணாமலை
Sep 1, 2025, 12:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அழகு முத்து கோன் வாழ்க்கை வரலாற்றை தமிழக பாட புத்தகத்தில் கொண்டு வர வேண்டும்!- அண்ணாமலை

Web Desk by Web Desk
Jul 11, 2024, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகையை பற்றி பேசியதற்கு அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தொலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல பேய்கள் உள்ளது, அந்த பேய்களை ஓட்டுவதற்காக தான் அண்ணாமலை எனும் வேதாளம் உருவெடுத்துள்ளதாகவும் இப்போது ஒவ்வொரு பேயாக ஓட்டிக்கொண்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள அழகு முத்துகோன்  திருவுருவச்சிலைக்கும், அவரது திருவுருவப்படத்திற்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

31 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஈடு இணை இல்லாத வீரர் அழகுமுத்துக்கோன் அவர்கள், அனைத்து ஆண்டும் இங்கு வருவது பெருமை இன்று இங்கு வந்திருப்பதை விட பெருமை எனக்கு வேறு எதுவும் கிடையாது.

2015 ஆம் ஆண்டு நமது மத்திய அரசு வீரமுத்துக்கோன் அவர்களுக்காக அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளோம். ஆண்டுதோரும் வைக்கக்கூடிய கோரிக்கை தான் தற்போது வைக்கிறோம், ஐயா வீரமுத்துக்கோன் அவர்களின் வாழ்க்கை சரித்திரம் தமிழ் பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும். பள்ளிக்கூடத்திலேயே குழந்தைகளுக்கு அய்யாவின் அருமை பெருமை நாம் சொல்லித் தர வேண்டும் என தெரிவித்தார்.

ஒரு பெரிய பீரங்கி முன்னாடி இவரை நிக்க வைத்து சுக்கு நூறாக உடைத்த போது கூட புன்னகையோடு, எதிர்கொண்ட மனிதர், முதலமைச்சர் நேரில் வந்து மரியாதை செலுத்துவது சந்தோஷம் என்றால் கூட, தமிழ்நாடு பாட கழகத்திற்கு ஒரு ஆணையிட வேண்டும், அய்யாவின் வரலாறு பாட புத்தகத்தில் இடம் பெற முதலமைச்சர் வழி செய்வார் என நம்புகிறோம் என கூறினார்.

பல பேய்கள் தமிழ்நாட்டில் உள்ளது. இந்த வேதாளம் வந்ததே அந்த பேய்களை ஓட்ட தான், தற்போது ஒவ்வொரு பேயாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன், இந்த பேயை ஓட்டிவிட்டு அந்த பேய்க்கு வருகிறேன்.

இத்தனை பேய் இருப்பதால் ஒரே நேரத்தில் செல்ல முடியாது, ஒவ்வொரு பேயாக தான் சென்று வர முடியும், இந்த பேய்கள் எல்லாம் தமிழக மக்களை பிடித்த பீடைகள் போல், 70 ஆண்டுகாலமாக பிடித்து, தமிழகத்தில் வளர்ச்சி இல்லை, வறுமை கோடு, விவசாயத்தறிகு தண்ணீர் இல்லை எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் தண்ணீர் இல்லை, காரணம் இந்த பேய்கள் தான், அதனால் ஒவ்வொரு பேயாக துரத்திக் கொண்டு வருகிறேன், இந்தப் பேய் முடித்துவிட்டு திரும்பவும் அந்த பேயிக்கு வருகிறேன், பொறுத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

நான் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை முன்னாள் ரவுடி என்பது சொன்னது பொய் இல்லை, அதற்கான தரவுகளை வெளியிட்டுள்ளேன். அவர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்பது பொய், இன்று முக்கியமாக காங்கிரஸ் தலைவர்கள் எனக்கு தொலைபேசி வாயிலாக இதனைப் பற்றி பேசியதற்கு நன்றி என கூறி வருகிறார்கள் என தெரிவித்தார்.

சாட்டை துரைமுருகனை அடிக்கடி கை செய்வது என்ன அர்த்தம், காவல்துறை இந்த வீரத்தை கூலிப்படை ரவுடிகள் மீது காட்ட வேண்டும், குறிப்பாக சாட்டை துரைமுருகனை டார்கெட் செய்வது நல்லதல்ல மிகவும் அசிங்கமான ஒரு செயல் எனவும்
காவல்துறை தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும் எனத்  தெரிவித்தார்.

எத்தனை ஆண்டுகள் திமுகவுக்கு காவல்துறை வேலை செய்வார்கள் என பார்க்கிறேன், மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என கூறினார்.

Tags: Azhlgu Muthu Gone biography should be brought in Tamilnadu text book!- Annamalai
ShareTweetSendShare
Previous Post

தொழில்துறையில் இந்தியா விரைவில் முதலிடம் பெறும்! – சந்திரபாபு நாயுடு நம்பிக்கை

Next Post

பெண்கள் முடிவெடுக்க அதிகாரம் அளிக்க வேண்டும்! – ஜெ.பி. நட்டா

Related News

கேரளா : கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை!

டீ, காபி விலை உயர்வு குறித்து சென்னைப் பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்!

தூத்துக்குடி அருகே அச்சுறுத்தும் விதமாக ரீல்ஸ் வெளியிட்ட ரவுடி கைது!

என்டிஏ கூட்டணியில் தான் தினகரன் உள்ளார் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஆப்கானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 500க்கும் மேற்பட்டோர் பலி!

மேகமலை அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

கிருஷ்ணகிரி : 6 மாத குழந்தையை கடத்தி சென்ற பெண் கைது!

பாஜக பெண் நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த திமுக நகர மன்ற தலைவி!

உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் – பிரதமர் மோடி

குடியரசு தலைவர் வருகை – டிரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவு!

காஷ்மீரி பண்டிட்களுக்கு சொந்தமான சாரதா பவானி கோயில் – 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறப்பு!

மிசோராமில் ரூ. 8,071 கோடி செலவில் அமைக்கபட்டுள்ள ரயில் பாதை – பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வந்தால் மட்டுமே இந்து மதத்தினருக்கு பாதுகாப்பு – அண்ணாமலை

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிப்பது இந்துக்களின் கடமை – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies