ஜம்மு காஷ்மீர் சட்டத்தில் திருத்தம் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்!
Aug 24, 2025, 10:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் சட்டத்தில் திருத்தம் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்!

Web Desk by Web Desk
Jul 16, 2024, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019-ல் உள்ள பிரிவு 55-ன் கீழ் திருத்தப்பட்ட விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பிரிவு 55 என்பது ஆளுநரின் அதிகாரத்தை பற்றியது. அதன்படி காவல்துறை, பொது ஒழுங்கு, அகில இந்திய பணியாளர்கள் தொடர்புடைய விஷயங்களில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த துறைகளைச் சேர்ந்த பணியாளர்களின் நியமனம் மற்றும் இடமாறுதல் தொடர்பான அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமிப்பதற்கு கவர்னரின் ஒப்புதல் தேவை.

மேலும் அட்வகேட் ஜெனரல் மற்றும் சட்ட அதிகாரிகளை நியமிப்பதற்கான முன்மொழிவை, சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை தலைமைச் செயலாளர் மூலம் துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க வேண்டும். அதே போல் வழக்கு தொடர அனுமதி வழங்குவது, மறுப்பது, மேல்முறையீடு செய்து போன்றவற்றுக்கும் துணை நிலை ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். சிறைச்சாலைகள், வழக்கு விசாரணை இயக்குநரகம் மற்றும் தடய அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களும் துணைநிலை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த சட்டத்திருத்தத்துக்கு தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் தேர்தல் தள்ளிப்போவதற்கான மற்றுமொரு அறிகுறி இது என்று எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதிகாரமற்ற, தன்னுடைய உதவியாளரை நியமிக்கக் கூட துணைநிலை ஆளுநரிடம் கைகட்டி கெஞ்சும் ரப்பர் ஸ்டாம்ப் முதலமைச்சரை விட ஜம்மு காஷ்மீர் மக்கள் மிகவும் தகுதியானவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முஃப்தி, நாட்டிலேயே மிகவும் சக்திவாய்ந்த சட்டப்பேரவையைாக இருந்த ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையிடம் இருந்து அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு பறித்துவிட்டது என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மத்திய அரசு நகராட்சியாக மாற்ற விரும்புகிறது என்றும் அதைத்தான் செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதோடு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை பிரிக்கப்பட்டு
யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன.

இந்நிலையில் இந்தாண்டு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் மத்திய அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Amendment to the Jammu and Kashmir Act gives additional powers to the Governor!
ShareTweetSendShare
Previous Post

ஷெங்கன் விசா நிராகரிப்பு! இந்தியர்களுக்கு ரூ.109 கோடி இழப்பு!

Next Post

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு!

Related News

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அருகே பேட்டரி கார் அணிவகுப்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லாதது குறித்த கேள்வி – திணறிய சுகாதாரத்துறை அமைச்சர்!

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies