ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நடைபெற்ற வடமாடு எருது கட்டு விழாவை, ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
கிடாதிருக்கை கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் மற்றும் தர்மமுனீஸ்வரர் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி வடமாடு எருதுகட்டு விழா நடைபெற்றது.
இதில், விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற 22 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கு ரொக்கப்பணம், சில்வர் அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.