மக்களவைத் தேர்தலில் அதீத நம்பிக்கையால் உத்தர பிரதேசத்தில் பாஜக பின்னடைவை சந்திக்க நேர்ந்ததாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 36-ஐ பாஜக கைப்பற்றியது. கடந்த முறையை விட இந்த முறை பின்னடைவை சந்தித்தது குறித்து லக்னோவில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என அதீத நம்பிக்கை வைத்ததன் காரணமாக, தவிர்க்க முடியாமல் விரும்பத்தகாத நிகழ்வுகளை சந்திக்க நேரிட்டதாக கூறினார்.
இதுபோல வரும் நாட்களில் அதீத நம்பிக்கையுடன் செயல்படக் கூடாது என பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்திய யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தவாறு பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை தாங்கள் உறுதிப்படுத்தியதாக குறிப்பிட்டார்.
















