நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு காரணமான பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த பங்கஜ் குமார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கை சேர்ந்த ராஜு சிங் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சிபிஐ விசாரணையில், ஹசாரிபாக் பகுதியிலிருந்து இரும்பு பெட்டியில் நீட் தேர்வு வினாத்தாள் கொண்டு சென்று அதை கசியவிட்டதாக கட்டட பொறியாளரான பங்கஜ் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால், அவரை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.