ஐநாவில் 5 முறையாக உரையாற்றும் பிரதமர் மோடி!
Jan 14, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐநாவில் 5 முறையாக உரையாற்றும் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Jul 18, 2024, 09:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நியூயார்க்கில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐநா பொதுச் சபையின் உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் ஆன பிறகு, ஐநா சபையில் பிரதமர் மோடி ஆற்றும் முதல் உரை இதுவாகும். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஐநா பொதுச் சபையின் 79வது அமர்வின் உயர்மட்டக் கூட்டம் செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. செப்டம்பர் 24ம் தேதி ஐநா உயர்மட்ட அமர்வை வழக்கம் போல் பிரேசில் தொடங்கி வைக்கிறது.

முன்னதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கிறார்.அதைத் தொடர்ந்து பொதுச் சபையின் 79 வது அமர்வின் தலைவர் உரையாற்றுகிறார்.

தொடர்ந்து, நவம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது பதவிக் காலத்தின் இறுதி உரை நிகழ்த்த இருக்கிறார்.

செப்டம்பர் 20 மற்றும் 21 தேதிகள் சபையின் நடவடிக்கை நாட்களாகவும் செப்டம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகள் உச்சிமாநாடு நடைபெறும் நாட்களாகவும் திட்டமிடப் பட்டுள்ளது. பிறகு நடக்கும் உயர்மட்ட கூட்டத்தில் ஐ.நாவின் எதிர்கால லட்சிய உச்சி மாநாடும் நடக்க இருக்கிறது.

இக் கூட்டத்தில் பிரதமர் மோடி செப்டம்பர் 26 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அமர்வில் உரையாற்றுவார் என்று ஐநா பேரவைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் அலுவலகம் வெளியிட்டுள்ள முதற்கட்டத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி அன்று இரவு 12:30 மணி முதல் 3:30 மணி வரை பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்ட பிறகு முதல் முறையாக கடந்த வாரம் பிரதமர் மோடி ரஷ்யாவில் நடந்த இந்தியா- ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார் . அதிபர் புதினுடனான பிரதமர் மோடியின் சந்திப்பும் , இருதரப்பு ஒப்பந்தங்களும் மேற்கத்திய நாடுகளைக் கவலைபட வைத்தன.

இந்நிலையில், பல்வேறு நாடுகளின் அதிபர்கள்,பிரதமர்கள் மற்றும் பிற மூத்த அரசியல் தலைவர்கள் கூடும் ஐநா ஆண்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஐநாவில், உரையாற்றுவது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஐந்தாவது முறையாக, ஐநா சபையில் உரையாற்றும் பிரதமர் மோடி, கடந்த 2021ம் ஆண்டு நடந்த ஐநா உயர்மட்ட கூட்ட அமர்வில் உரையாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் டிஜிட்டல் ஒப்பந்தம் கொண்டுவர இருக்கும் ஐநா சபை, எதிர்கால தலைமுறைகள் பற்றிய பிரகடனத்தையும் வெளியிட உள்ளது.

சிறந்த நிகழ்காலத்தை வழங்கவும், எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் ஒரு புதிய சர்வதேச கருத்தை ஒருமித்த குரலில் முடிவெடுக்கும் ஐநா உயர்மட்ட உச்சிமாநாட்டில் , பிரதமர் மோடியின் உரையைக் கேட்க உலகமே காத்திருக்கிறது.

ஐநாவில் இந்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அந்த உரை, ஐ.நா.வின் 6 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒரே நேரத்தில் மொழிபெயர்த்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags: Prime Minister Modi will address the UN 5 times!
ShareTweetSendShare
Previous Post

உயிரை பணயம் வைத்து சாலையில் பயணம் செய்யும் மக்கள்!

Next Post

சர்வேச அளவில் பாராட்டு பெறும் இந்தியாவின் SPG!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies