ஐநாவில் 5 முறையாக உரையாற்றும் பிரதமர் மோடி!
Jul 24, 2026, 09:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐநாவில் 5 முறையாக உரையாற்றும் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Jul 18, 2024, 09:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நியூயார்க்கில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐநா பொதுச் சபையின் உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் ஆன பிறகு, ஐநா சபையில் பிரதமர் மோடி ஆற்றும் முதல் உரை இதுவாகும். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஐநா பொதுச் சபையின் 79வது அமர்வின் உயர்மட்டக் கூட்டம் செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. செப்டம்பர் 24ம் தேதி ஐநா உயர்மட்ட அமர்வை வழக்கம் போல் பிரேசில் தொடங்கி வைக்கிறது.

முன்னதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கிறார்.அதைத் தொடர்ந்து பொதுச் சபையின் 79 வது அமர்வின் தலைவர் உரையாற்றுகிறார்.

தொடர்ந்து, நவம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது பதவிக் காலத்தின் இறுதி உரை நிகழ்த்த இருக்கிறார்.

செப்டம்பர் 20 மற்றும் 21 தேதிகள் சபையின் நடவடிக்கை நாட்களாகவும் செப்டம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகள் உச்சிமாநாடு நடைபெறும் நாட்களாகவும் திட்டமிடப் பட்டுள்ளது. பிறகு நடக்கும் உயர்மட்ட கூட்டத்தில் ஐ.நாவின் எதிர்கால லட்சிய உச்சி மாநாடும் நடக்க இருக்கிறது.

இக் கூட்டத்தில் பிரதமர் மோடி செப்டம்பர் 26 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அமர்வில் உரையாற்றுவார் என்று ஐநா பேரவைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் அலுவலகம் வெளியிட்டுள்ள முதற்கட்டத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி அன்று இரவு 12:30 மணி முதல் 3:30 மணி வரை பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்ட பிறகு முதல் முறையாக கடந்த வாரம் பிரதமர் மோடி ரஷ்யாவில் நடந்த இந்தியா- ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார் . அதிபர் புதினுடனான பிரதமர் மோடியின் சந்திப்பும் , இருதரப்பு ஒப்பந்தங்களும் மேற்கத்திய நாடுகளைக் கவலைபட வைத்தன.

இந்நிலையில், பல்வேறு நாடுகளின் அதிபர்கள்,பிரதமர்கள் மற்றும் பிற மூத்த அரசியல் தலைவர்கள் கூடும் ஐநா ஆண்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஐநாவில், உரையாற்றுவது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஐந்தாவது முறையாக, ஐநா சபையில் உரையாற்றும் பிரதமர் மோடி, கடந்த 2021ம் ஆண்டு நடந்த ஐநா உயர்மட்ட கூட்ட அமர்வில் உரையாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் டிஜிட்டல் ஒப்பந்தம் கொண்டுவர இருக்கும் ஐநா சபை, எதிர்கால தலைமுறைகள் பற்றிய பிரகடனத்தையும் வெளியிட உள்ளது.

சிறந்த நிகழ்காலத்தை வழங்கவும், எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் ஒரு புதிய சர்வதேச கருத்தை ஒருமித்த குரலில் முடிவெடுக்கும் ஐநா உயர்மட்ட உச்சிமாநாட்டில் , பிரதமர் மோடியின் உரையைக் கேட்க உலகமே காத்திருக்கிறது.

ஐநாவில் இந்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அந்த உரை, ஐ.நா.வின் 6 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒரே நேரத்தில் மொழிபெயர்த்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags: Prime Minister Modi will address the UN 5 times!
ShareTweetSendShare
Previous Post

உயிரை பணயம் வைத்து சாலையில் பயணம் செய்யும் மக்கள்!

Next Post

சர்வேச அளவில் பாராட்டு பெறும் இந்தியாவின் SPG!

Related News

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies