ஒலிம்பிக் பாதுகாப்பில் இந்திய K 9 நாய்கள் குழு!
Mar 16, 2026, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒலிம்பிக் பாதுகாப்பில் இந்திய K 9 நாய்கள் குழு!

Murugesan M by Murugesan M
Jul 21, 2024, 07:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதன்முறையாக, பாரீஸ் ஒலிம்பிக் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் “K-9” நாய்கள் குழு பாரீஸ் சென்றுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஒலிம்பிக் போட்டிகளை பாதுகாப்பாக நடத்த பிரான்ஸ் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஒலிம்பிக் போட்டி நாட்களில் தினமும் 30,000 காவல்துறையினர் பாதுகாப்புக்காக பணியில் இருப்பார்கள் என்றும், செய்ன் நதியில் நடக்கும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் மட்டும் 45,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் பல்வேறு இடங்களில் இந்தியாவின் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) K9 குழுவான உயர்தர நாய்கள் குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

பத்து பேர் கொண்ட K-9 குழுவில் இடம் பெற்றுள்ள, இந்தியாவின் “K-9” நாய்கள் குழு, ஒரு மாதம் முழுவதும் பாரிஸில் ஒலிம்பிக்கைப் பாதுகாக்கும் என்று பிரான்சுக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரஃப், அறிவித்திருக்கிறார்.

இந்திய K-9 குழுவில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த நாய்கள் உள்ளன. ஆறு Belgian Shepherds நாய்கள், , மூன்று German Shepherds, நாய்கள் மற்றும் ஒரு Labrador Retriever நாய் என்ற குழு முதல் முறையாக அயல்நாட்டில் பாதுகாப்புப் பணிகளுக்காக சென்றுள்ளது.

ஒலிம்பிக்கின் போது விளையாட்டு நிகழ்வுகளை நடத்தும் பல்வேறு இடங்களில் மோப்பம் பிடித்தல் மற்றும் ரோந்து பணியை மேற்கொள்வது ஆகியவை இந்திய “K-9” நாய்கள் குழுவின் கடமைகளாகும்.

ஏற்கெனவே, 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த G-20 உச்சி மாநாட்டில் இந்த நாய்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, சர்வ தேச அங்கீகாரத்தையும் பாராட்டுக்களையும் பெற்றனர்.

இந்த நாய்களுடன் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), இந்தோ திபெத்திய எல்லைக் காவல் (ITBP), சஷாஸ்த்ரா சீமா பால் (SSB), அசாம் ரைபிள்ஸ் மற்றும் உயரடுக்கு தேசிய பாதுகாப்புப் படையினர் உட்பட பல்வேறு மத்திய ஆயுதக் காவல் படைகளைச் சேர்ந்த 17 பணியாளர்கள் (CAPFs) ஒலிம்பிக் பாதுகாப்புப் பணிகளுக்காக பாரீஸ் சென்றுள்ளனர்.

ஒவ்வொரு நாயும் மிகுந்த அதன் தனித்துவமான திறமைகளின் அடிப்படையில் விரிவான பயிற்சிகள் மற்றும் தகுந்த சோதனைகளுக்குப் பிறகே தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளன. பாரிஸுக்குப் புறப்படுவதற்கு முன் இந்திய மற்றும் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு இடையேயான நாய் படைகளின் முதல் வகையான ஒத்துழைப்புக்காக 10 வார சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டுக்கு, Belgian Shepherds நாய்கள், நக்ஸலைட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சுறுசுறுப்பு, கூர்மையான அறிவு ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற Belgian Shepherds சர்வதேச அளவில் பல நாட்டு சிறப்புப் படையினரால் பெரிதும் விரும்பப்படுகிறது.

பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக, ஒலிம்பிக் விளையாட்டுகள் மைதானத்தில் தொடங்கப்படாமல், செய்ன் நதியில் தொடங்குகிறது. இவ்விழாவில், 206 வெவ்வேறு தேசிய ஒலிம்பிக் கமிட்டிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்களை ஏற்றிச் செல்லும் படகுகள், நதியியில் ஆறு கிலோமீட்டர் நீளத்தை 18 பாலங்களை கடந்து வரும் பெரிய அணிவகுப்பாக வர உள்ளது.

எனவே , இந்தியாவில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில், 10 பேர் கொண்ட K9 நாய்கள் குழு மற்றும் 17 பணியாளர்கள் பாரீஸ் ஒலிம்பிக் பாதுகாப்பை வழங்க உள்ளனர். இந்திய K9 குழு வெளிநாட்டில் இதுபோன்ற பணிகளைச் செய்வது இதுவே முதல் முறை என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Tags: Indian K 9 Dog Team in Olympic Protection!
ShareTweetSendShare
Previous Post

அற்புதங்கள் நிகழ்த்தும் பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில்!

Next Post

உலக பாரம்பரிய கமிட்டியின் 21-ஆவது கூட்டம்! – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Related News

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies