ஹரியானாவில் சட்டவிரோத சுரங்க வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுரேந்தர் பவாரை ஒன்பது நாள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அம்பாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஹரியானா சோனிபட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுரேந்தர் பவார் சட்டவிரோத சுரங்கம் சார்ந்த பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இவரை மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறையினர் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், எம்.எல்.ஏ. சுரேந்தர் பவாரை ஒன்பது நாள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. ஹரியானாவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைதால், தர்மச்சங்கடத்தில் அக்கட்சியின் மேலிடம் உள்ளது.