முறைகேடுகளில் ஈடுபட்ட பேராசிரியர்கள், கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!- துணைவேந்தர் வேல்ராஜ்
Oct 10, 2025, 09:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முறைகேடுகளில் ஈடுபட்ட பேராசிரியர்கள், கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!- துணைவேந்தர் வேல்ராஜ்

Web Desk by Web Desk
Jul 24, 2024, 05:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நேரத்தில் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் National symposium on unmanned Aeriel vehicles and drones for defence நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இயக்குனர் ரீன் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் லெப்டினட் ஜெனரல் பரார், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய துணைவேந்தர் வேல்ராஜ்;

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக டிரோன் துறையில் ஏராளமான சாதனைகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் எண்ணற்ற அறிஞர்களும் வல்லுனர்களும் பங்கேற்று இருக்கிறார்கள். உடன் தமிழ்நாட்டில் உள்ள 30 ட்ரோன் நிறுவனங்களும் பங்கேற்று இருக்கிறார்கள்.

டிரோன் துறை வரும் காலங்களில் வெவ்வேறு துறைகளில் பயன்படும். அதற்காக நமது இந்திய அரசும் தர சான்றிதழ் கொடுத்து வருகிறது.

எந்த ஒரு துறையிலும் தரம் இருந்தால்தான் அந்த துறை நீடித்து இருக்கும். டைரக்டர் ஜெனரல் ஆப் குவாலிட்டி அஷுரன்ஸ் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த சிம்போசியம் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் எக்கசகமான துறைகள் பயன்பெறும்.

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 52 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். கல்லூரிகளில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என கணக்கிடுவது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதுதான். இதில் முறைகேடுகளும் இருக்கிறது.

ஒவ்வொரு ஆசிரியரின் ஆதார் எண்ணை வைத்து இதனை சரி பார்ப்போம். அந்த வகையில் ஆசிரியர்களின் ஆதார் எண் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சில ஆசிரியர்கள் ஆதார் எண்ணை மாற்றி பதிவிட்டு முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதன் பிறகுதான் வெவ்வேறு ஆதார் எண்ணுடன் இவர்கள் இருந்தார்கள் என்பது தெரிய வந்தது.

இதில் 189 ஆசிரியர்கள் வெவ்வேறு கல்லூரிகளில் பணியாற்றியுள்ளனர். இந்த 189 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். இது போன்ற ஆசிரியர்கள் பணியமர்த்திய கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த முறைகேட்டில் 189 ஆசிரியர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். 52 ஆயிரம் ஆசிரியர்கள் இருக்கவேண்டிய இடத்தில் 2000 ஆசிரியர்கள் குறைபாடு இருக்கிறது. இந்த 2000 ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஈடு கட்டுவதற்காக 189 ஆசிரியர்கள் முறை கேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு ஆசிரியர் 32 கல்லூரியில் பணி சேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆதார் கார்டு எண்ணை தவறாக பதிவு செய்து முறைகேடில் ஈடுபட்டிருக்கின்றனர். இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமின்றி இது போன்ற இது முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத்  தெரிவித்தார்.

Tags: Action will be taken against professors and colleges involved in irregularities!- Vice Chancellor Velraj
ShareTweetSendShare
Previous Post

நிர்மலா சீதாராமனுக்கு அஸ்ஸாம் முதல்வர் பாராட்டு!

Next Post

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பில் சலுகைகள்! – யாருக்கு எவ்வளவு லாபம்?

Related News

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசே காரணம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்துக்குள் கொட்டிய மழை நீர் – பயணிகள் அவதி!

சேலத்தில் 1 மணி நேரம் கனமழை – சாலைகளில் வெள்ளம்!

பணக்காரர்களின் திருமண விழாவில் மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர் – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

திமுகவில் இணைந்த விருதுநகர் காங்கிரஸ் நிர்வாகி – கூட்டணியில் சலசலப்பு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை – காசா போர் நிறுத்தத்திற்கு வாழ்த்து

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – காசா போர் நிறுத்த முயற்சிக்கு வாழ்த்து!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies