மதுரையில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பதிவிட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெண்களை ஆபாசமாக சித்தரித்து எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிடப்படுவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆபாச பதிவை வெளியிட்ட திருப்பூரை சேர்ந்த சூர்யா என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.