வார விடுமுறையை ஒட்டி குமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
கனமழை காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நீர்வரத்து சீரானதால் தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் வார இறுதி நாட்களை ஒட்டி சுற்றுலாப்பயணிகள் தங்களது குடும்பத்துடன் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.
















