நாடு கடத்தப்படும் அபாயம்!  அச்சத்தின் பிடியில் இந்திய அமெரிக்க குழந்தைகள்!
Mar 20, 2026, 04:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு கடத்தப்படும் அபாயம்!  அச்சத்தின் பிடியில் இந்திய அமெரிக்க குழந்தைகள்!

Murugesan M by Murugesan M
Jul 30, 2024, 08:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் உள்ள சுமார் 2,50,000 க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்க குழந்தைகள், 21 வயதாகும் போது தானாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர். அதனால், அவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

செல்லுபடியாகும் விசாக்களுடன் அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் அழைத்து செல்லலாம். அதில் ஒரு வகை தான் H4 சார்பு விசா ஆகும்.
H1-B விசாவை வைத்திருக்கும் மனைவி அல்லது பெற்றோரால் இந்த H4 விசா ஸ்பான்சர் செய்யப்படுகிறது. ஸ்பான்சரின் விசா காலாவதியாகும் போது H4 விசா ரத்து செய்யப்படுகிறது.

H-1B விசா வைத்திருப்பவர்களின் உடனடி குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவில் வேலை செய்யவும் மற்றும் பள்ளியில் சேர்ந்து படிக்கவும் அமெரிக்க அரசு அனுமதி அளிக்கிறது.

மேலும், அமெரிக்க வங்கிகளில் கடன் போன்ற நிதிச் சேவைகளைப் பெறவும், வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெறவும், எந்த வகையான தொழில் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தவும், அரசு அனுமதி அளித்திருக்கிறது.

வேலை தேடுவதில் தீவிரமாக இல்லாவிட்டாலும் கூட பணியாற்றுவதற்கு தகுதியுடையவராக H4 விசா உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளப் படுவார்கள்.

இப்படி DEPENDENT VISA வைத்திருப்பவர்கள், அமெரிக்காவில் சட்டப்பூர்வ அந்தஸ்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த DEPENDENT VISA தான் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் தங்கள் குடும்பங்களை அமெரிக்காவுக்கு அழைத்து செல்வதைச் சாத்தியமாக்குகிறது.

அமெரிக்காவில் வாழும் குழந்தைகள், 21 வயதை எட்டும் போது அந்த DEPENDENT VISA தானாக காலாவதி ஆகி விடும். அதற்குள் வேறு விசாவையோ, அல்லது நிரந்தர குடியுரிமையோ அந்த குழந்தை பெறவேண்டும்.

தொடர்ந்து, அமெரிக்காவில் குடியிருக்க புதிய நிலைக்கு மாறவில்லை என்றால், அந்த குழந்தைகளுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஏனெனில், அந்த குழந்தைகள் சார்ந்திருக்கும் நீண்ட கால விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறும் நிலையைத் தடுத்து விடுகிறது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 2ஆம் தேதி வரை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) தரவுகளை அமெரிக்கக் கொள்கைக்கான தேசிய அறக்கட்டளை ஆய்வு செய்தது.

அந்த அறிக்கையில், சுமார் 2,50,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் சார்பு விசா உள்ளவர்கள் EB-1, EB-2, EB-3 க்ரீன் கார்டுகளுக்காக காத்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் , குடியேற்றம், குடியுரிமை மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான செனட் நீதித்துறை துணைக்குழுவின் தலைவர் செனட்டர் அலெக்ஸ் பாடில்லா மற்றும் டெபோரா ரோஸ் தலைமையிலான 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இந்த தனிநபர்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு ஜோ பைடன் அரசை வலியுறுத்தி இருக்கிறது.

இந்த இந்திய அமெரிக்கர்கள், அமெரிக்காவில் வளர்ந்து, அமெரிக்காவில் பள்ளிக் கல்வியை முடித்து, அமெரிக்க பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பை முடித்துள்ளனர்.

இருப்பினும், நீண்ட காலமாக கிரீன் கார்டு கிடைக்காததன் காரணமாக, அமெரிக்காவை விட்டு நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர்.

இம்ப்ரூவ் தி ட்ரீம், என்ற அமைப்பினர், இந்தக் குழந்தைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 100க்கும் மேற்பட்ட அரசு நிர்வாக அலுவலகங்கள் மற்றும் மூத்த நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து தீர்வுக்காக போராடி வருகிறது.

500,000 க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் மற்றும் அமெரிக்காவில் அவர்கள் குடும்பங்கள் நிரந்தரமாக வாழவும் வழிவகை செய்து வருகிறோம் என்றும், ஆனால் நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியரசுக் கட்சிதான் முட்டுக்கட்டை போடுவதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவிலேயே வளர்ந்த மற்றும் படித்த இளம் திறமைகளை மட்டும் இழக்கவில்லை, அவர்களுடன் சிறு வணிக உரிமையாளர்களாக அல்லது மருத்துவம், பொறியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் பல வருட நடைமுறை அனுபவமுள்ள அவர்களின் பெற்றோர்களையும் நாடு இழக்க போகிறது.

பொருளாதார ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் இந்திய அமெரிக்கர்களை நாடு கடத்தாமல் நிரந்தரக் குடியுரிமை வழங்குவது தான் நியாயமானது என்று இம்ப்ரூவ் தி ட்ரீமின் நிறுவனர் டிப் படேல் தெரிவித்துள் ளார்.

Tags: Risk of deportation!  Indian American children in the grip of fear!
ShareTweetSendShare
Previous Post

3 IAS பயிற்சி மாணவர்கள் பலியாக காரணம் என்ன? விதிமீறலால் விபரீதம்!

Next Post

மோடியின் MASTERSTROKE ! : 4.1 கோடி இளைஞர்களுக்கு பயிற்சியுடன் வேலைவாய்ப்பு!

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies