நாடு கடத்தப்படும் அபாயம்!  அச்சத்தின் பிடியில் இந்திய அமெரிக்க குழந்தைகள்!
Aug 9, 2026, 08:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு கடத்தப்படும் அபாயம்!  அச்சத்தின் பிடியில் இந்திய அமெரிக்க குழந்தைகள்!

Murugesan M by Murugesan M
Jul 30, 2024, 08:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் உள்ள சுமார் 2,50,000 க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்க குழந்தைகள், 21 வயதாகும் போது தானாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர். அதனால், அவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

செல்லுபடியாகும் விசாக்களுடன் அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் அழைத்து செல்லலாம். அதில் ஒரு வகை தான் H4 சார்பு விசா ஆகும்.
H1-B விசாவை வைத்திருக்கும் மனைவி அல்லது பெற்றோரால் இந்த H4 விசா ஸ்பான்சர் செய்யப்படுகிறது. ஸ்பான்சரின் விசா காலாவதியாகும் போது H4 விசா ரத்து செய்யப்படுகிறது.

H-1B விசா வைத்திருப்பவர்களின் உடனடி குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவில் வேலை செய்யவும் மற்றும் பள்ளியில் சேர்ந்து படிக்கவும் அமெரிக்க அரசு அனுமதி அளிக்கிறது.

மேலும், அமெரிக்க வங்கிகளில் கடன் போன்ற நிதிச் சேவைகளைப் பெறவும், வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெறவும், எந்த வகையான தொழில் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தவும், அரசு அனுமதி அளித்திருக்கிறது.

வேலை தேடுவதில் தீவிரமாக இல்லாவிட்டாலும் கூட பணியாற்றுவதற்கு தகுதியுடையவராக H4 விசா உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளப் படுவார்கள்.

இப்படி DEPENDENT VISA வைத்திருப்பவர்கள், அமெரிக்காவில் சட்டப்பூர்வ அந்தஸ்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த DEPENDENT VISA தான் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் தங்கள் குடும்பங்களை அமெரிக்காவுக்கு அழைத்து செல்வதைச் சாத்தியமாக்குகிறது.

அமெரிக்காவில் வாழும் குழந்தைகள், 21 வயதை எட்டும் போது அந்த DEPENDENT VISA தானாக காலாவதி ஆகி விடும். அதற்குள் வேறு விசாவையோ, அல்லது நிரந்தர குடியுரிமையோ அந்த குழந்தை பெறவேண்டும்.

தொடர்ந்து, அமெரிக்காவில் குடியிருக்க புதிய நிலைக்கு மாறவில்லை என்றால், அந்த குழந்தைகளுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஏனெனில், அந்த குழந்தைகள் சார்ந்திருக்கும் நீண்ட கால விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறும் நிலையைத் தடுத்து விடுகிறது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 2ஆம் தேதி வரை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) தரவுகளை அமெரிக்கக் கொள்கைக்கான தேசிய அறக்கட்டளை ஆய்வு செய்தது.

அந்த அறிக்கையில், சுமார் 2,50,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் சார்பு விசா உள்ளவர்கள் EB-1, EB-2, EB-3 க்ரீன் கார்டுகளுக்காக காத்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் , குடியேற்றம், குடியுரிமை மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான செனட் நீதித்துறை துணைக்குழுவின் தலைவர் செனட்டர் அலெக்ஸ் பாடில்லா மற்றும் டெபோரா ரோஸ் தலைமையிலான 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இந்த தனிநபர்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு ஜோ பைடன் அரசை வலியுறுத்தி இருக்கிறது.

இந்த இந்திய அமெரிக்கர்கள், அமெரிக்காவில் வளர்ந்து, அமெரிக்காவில் பள்ளிக் கல்வியை முடித்து, அமெரிக்க பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பை முடித்துள்ளனர்.

இருப்பினும், நீண்ட காலமாக கிரீன் கார்டு கிடைக்காததன் காரணமாக, அமெரிக்காவை விட்டு நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர்.

இம்ப்ரூவ் தி ட்ரீம், என்ற அமைப்பினர், இந்தக் குழந்தைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 100க்கும் மேற்பட்ட அரசு நிர்வாக அலுவலகங்கள் மற்றும் மூத்த நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து தீர்வுக்காக போராடி வருகிறது.

500,000 க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் மற்றும் அமெரிக்காவில் அவர்கள் குடும்பங்கள் நிரந்தரமாக வாழவும் வழிவகை செய்து வருகிறோம் என்றும், ஆனால் நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியரசுக் கட்சிதான் முட்டுக்கட்டை போடுவதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவிலேயே வளர்ந்த மற்றும் படித்த இளம் திறமைகளை மட்டும் இழக்கவில்லை, அவர்களுடன் சிறு வணிக உரிமையாளர்களாக அல்லது மருத்துவம், பொறியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் பல வருட நடைமுறை அனுபவமுள்ள அவர்களின் பெற்றோர்களையும் நாடு இழக்க போகிறது.

பொருளாதார ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் இந்திய அமெரிக்கர்களை நாடு கடத்தாமல் நிரந்தரக் குடியுரிமை வழங்குவது தான் நியாயமானது என்று இம்ப்ரூவ் தி ட்ரீமின் நிறுவனர் டிப் படேல் தெரிவித்துள் ளார்.

Tags: Risk of deportation!  Indian American children in the grip of fear!
Share
Tweet
SendShare
Previous Post

3 IAS பயிற்சி மாணவர்கள் பலியாக காரணம் என்ன? விதிமீறலால் விபரீதம்!

Next Post

மோடியின் MASTERSTROKE ! : 4.1 கோடி இளைஞர்களுக்கு பயிற்சியுடன் வேலைவாய்ப்பு!

Related News

ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? : தாக்குதல்களை முடிப்பதற்கு முன்பே போர்நிறுத்தத்திற்கு கெஞ்சிய பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் பதவி லஞ்சமாகத்தான் கருதப்படும் – திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்

மற்றொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம் : ஷேக் ஹசீனாவின் மகன் எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஆடி அமாவாசை – காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவியும் பக்தர்கள்!

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவிகளை மருத்துவர்கள் பெறக்கூடாது – சுகாதார அமைச்சகம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் நடைபெறும் சுதேசி கண்காட்சி 2026 – பார்வையாளர்களை கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் புத்தக ஸ்டால்!

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது – அமித் ஷா புகழாரம்!

உயர்ரக போதை பொருள் புழக்கம் – பொத்தேரியில், பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் சோதனை!

நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது – ஈரான் திட்டவட்டம்!

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

அரசு வாகனம் வர தாமதம் – ஆட்டோவில் பயணம் செய்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!

தவெகவில் 27 மாவட்ட செயலாளர்கள் நியமனம் – விஜயபாஸ்கர்களுக்கும் பதவி!

புதுச்சேரி  சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies