தண்ணீரை பாதுகாக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்! - தமிழிசை சௌந்தரராஜன்
Sep 8, 2025, 12:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தண்ணீரை பாதுகாக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்! – தமிழிசை சௌந்தரராஜன்

Web Desk by Web Desk
Jul 29, 2024, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் ஆதாயத்திற்காக தமிழக முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர்,

காவிரியில் இருந்து கர்நாடகா அரசு தண்ணீர் தரவில்லை என்றாலும் கூட, இயற்கை அன்னையால் காவிரியில் அதிக அளவில் தற்போது தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த தண்ணீரை பாதுகாக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் இது போன்று தமிழகத்தில் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க
காவிரி உள்பட ஆறுகளில் தடுப்பணைகளை கட்ட வேண்டும். ஆந்திர மாநிலம் போலவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துநிதி உதவி வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தினால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்துக்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கும்
குடிநீருக்கு ஆதாரமாக அந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இதுபோன்ற தொலைநோக்கு திட்டங்களை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்.

கோதாவரி தண்ணீர் அதிகமாக கடலில் கலக்கிறது, அதிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என அன்றைய தெலுங்கானா முதலமைச்சரிடம் பேசி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும் தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளச்சாராயம் வழக்கு நெல்லையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் விஜயகுமார் படுகொலை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை தமிழக அரசு இன்னும் கைது செய்யவில்லை. எனவே தமிழக அரசு இதற்கு காரணமானவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.

தமிழக முதலமைச்சர் அரசியல் ஆதாயத்திற்காக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை.
நிதி ஆயோக் கூட்டம் மத்திய மாநில அரசுகளுக்கு பாலமான ஒரு கூட்டம். மத்திய மாநில அரசுகளின் பொருளாதாரத்திற்கான தீவிர ஆலோசனை கூட்டம், இந்தக் கூட்டத்தில் என்னென்ன தேவை என்பதை நேரடியாக செல்லக்கூடிய ஒரு கூட்டம்.

இதனை ஒரு அரசியல் கூட்டம் போல நினைத்து எல்லா எதிர்க்கட்சி முதலமைச்சர்களும் அதனை புறக்கணித்து மக்களின் நலனையும் புறக்கணித்து உள்ளனர் என்று கூறினார்.

நடிகர் விஜய் கட்சி துவக்கப்பட்டுள்ளார் பாஜகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. பாஜக வளர்ந்த கட்சி, பாஜகவின் கொள்கைகள் வேறு, எனவே நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததினால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் கூறினார்.

Tags: Tamilnadu government should pay extra attention to protect water! - Tamilisai Soundararajan
ShareTweetSendShare
Previous Post

12,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும்! – அண்ணாமலை வலியுறுத்தல்

Next Post

ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண விழா!

Related News

டிரம்ப் அளித்த விருந்தில் தடுமாறிய ஜாம்பவான்கள் : வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பிரம்மோற்சவ விழா – வேலூரில் திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதம் புறப்பாடு ஊர்வலம்!

அதிரடியாக அறிவித்த டொயோட்டா : SUV கார்கள் விலை ரூ.3.49 லட்சம் வரை குறையுமாம் – சிறப்பு தொகுப்பு!

ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை – பழனி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

ராணுவ பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி : சிறப்பு தொகுப்பு!

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 32 காவல் நிலைய மரணங்கள் – மனித உரிமை அமைப்பு தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயவாடாவில் 72 உயர பிரமாண்ட களிமண் விநாயகர் சிலை கரைப்பு!

பண்ருட்டி அருகே பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அவமானப்படுத்திய சம்பவம் – இடப்பிரச்சனையால் நிகழ்ந்த கொடூரம்!

சந்திர கிரகணம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!

வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளர் மீது காவலர் தாக்குதல் – இருவரும் மருத்துவமனையில் அனுமதி!

வாஷிங்டனில் அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

கயானா தேர்தலில் வெற்றி – அதிபர் இர்ஃபான் அலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies