பாரிஸ் ஒலிம்பிக்கின் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.
பேட்மிண்டனில் மகளிர் ஒற்றையர் பிரிவு லீக் சுற்றில் ‘எம்’ பிரிவில் இடம் பெற்றுள்ள 13-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து தமது 2-வது ஆட்டத்தில் 73-ம் நிலை வீராங்கனையான எஸ்டோனியாவின் கிறிஸ்டின் குபாவை எதிர்கொண்டார்.
இதில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து கால் இறுதியின் முந்தைய சுற்றான ரவுண்ட் ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தார். இதில் சீன வீராங்கனையான ஹா பிங் ஜியாவை எதிர்கொண்ட சிந்து 19-க்கு 21, 14-க்கு 21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து சிந்து வெளியேறியுள்ளார்.