ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சியில் உள்ள காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் தாழ்வான பகுதிகளில் இறங்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில்,
ஆடிப்பெருக்கு தினத்தன்றும் , அமாவாசை தினத்தன்றும் ஆற்றின் படித்துறை இல்லாத பகுதிகளில் மக்கள் இறங்குவதற்கும், நீராடுவதற்கும் தடை விதிப்பதாகவும், அம்மா மண்டபத்தில் பூஜைகள் நடத்திக்கொள்ள அனுமதி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.