திருச்சி கொள்ளிடம் ஆற்றில், ஓரிரு மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட தடுப்பணை, நீர் வரத்தை தாக்குபிடிக்க முடியாமல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
மண் அரிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக, திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நேப்பியர் பாலம் அருகே தடுப்பணை கட்டப்பட்டது.
850 மீட்டர் நீளத்தில், சுமார் ஆறரை கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த தடுப்பணை, சில மாதங்களுக்கு முன்னர் தான் திறக்கப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் தற்போது வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் வரத்தை தாக்குபிடிக்க முடியாமல், புதிய தடுப்பணையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. நீர் வரத்து குறைந்த பின்னரே தடுப்பணை எவ்வளவு தூரத்திற்கு சேதமடைந்தது என்பது முழுமையாக தெரியவரும்.
சுமார் ஆறரை கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த தடுப்பணை, சில மாதங்களிலேயே சேதமடைந்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தடுப்பணையை காணவில்லை என திரைப்பட நகைச்சுவையை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார்.