“வக்பு வாரியத்தின் சொத்துகள் தொடர்பாக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தால், அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம்” என அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் உமர் அகமது இல்யாசி தெரிவித்துள்ளார்.
வக்பு வாரியத்தின் சொத்துகள் மீதான அதிகாரத்தை தடுக்கும் வகையில் மத்திய அரசு மசோதா கொண்டு வர உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுபோன்ற சட்ட திருத்தங்கள் காலத்தின் தேவை” எனவும், “இதில் அரசியல் கூடாது” என்றும் தெரிவித்தார்.