மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
ஷாபூரில் உள்ள ஹர்தவுல் பாபா கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கோயிலின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 9 சிறுவர்கள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ரேவா மாவட்டத்தில் நேற்று வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.