சிவகங்கை ரயில் நிலையத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரங்களை ரயில்வே நிர்வாகத்தினர் வெட்டியதற்கு பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை ரயில் நிலையத்தை நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரயில் நிலையத்தை சுற்றி உள்ள நூற்றாண்டுகளை கடந்த நிழல் தரும் ஆலமரங்களை ரயில்வே நிர்வாகத்தினர் வெட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெட்ட வெளியாக காட்சியளிக்கிறது.