விடுமுறை தினத்தையொட்டி, தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி மற்றும் புலி அருவி என அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி, ஐந்தருவியில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.