அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை ஈரான் ஆதரவு பெற்ற பாகிஸ்தானை சேர்ந்தவர் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியது புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
இதில் கண்ணிமைக்கும் நொடியில் டிரம்ப் உயிர்தப்பினார். இதற்கு முந்தைய தினம்தான் அமெரிக்க அரசு அதிகாரிகள் சிலரை கொலை செய்ய சதி செய்ததாக பாகிஸ்தானை சேர்ந்த ஆசிஃப் மெர்ச்சன்ட் என்பவரை போலீஸார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், அவரிடம் தற்போது நடத்தப்பட்ட விசாரணையில், டொனால்ட் டிரம்புக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதற்கு ஆசிஃப் மெர்ச்சன்ட் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு ஈரானின் ஆதரவு இருப்பது தெரியவந்ததால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.