செங்கல்பட்டு நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் இளைஞரை ஆபாசமாக திட்டும் நடத்துநரின் வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி அரசு மாநகரப் பேருந்து சென்றுகொண்டிருந்தது.
பேருந்தில் ஏறிய இளைஞர் ஒருவர் 200 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது சில்லரை இல்லை எனக் கூறிய நடத்துனர், இளைஞரை ஆபாசமாக திட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.