கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதிசாரத்தை சேர்ந்த சுப்புலட்சுமி, இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தோவாளை சார்பதிவாளர் விடுப்பில் சென்றபோது, அந்த பணிக்கு சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டார். அப்போது அலுவலகத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சுமார் 25 பத்திரங்களை முறைகேடாக பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக புகாரளிக்கப்பட்ட நிலையில் சுப்புலட்சுமி உள்பட 5 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.