நீலகிரி மாவட்டம், முதுமலை காப்பக வனப்பகுதி அருகே வன விலங்குகள் சாலையில் சுற்றித்திரிவதை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.
கேரளா, கர்நாடக வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த வனவிலங்குகள் மீண்டும் முதுமலைக்குள் வரத் தொடங்கியுள்ளன. அதன் படி சாலைகளில் கூட்டம் கூட்டமாக வந்த மான்கள் மற்றும் யானையை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
இந்நிலையில் சுற்றுலாப்பயணிகள் வாகனங்களை நிறுத்தி புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.