திண்டுக்கல்லில் முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் ஏராளமானோர் வசித்து வரும் நிலையில் மாநராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் குடிநீர் அனைத்து பகுதிக்கும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனை கண்டித்த அப்பகுதி பெண்கள் நால்ரோடு பகுதியில் காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து வந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.