சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடி தபசு திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி கொடி மரத்திற்கு 16 வகையான பொருள்களாலும் கலச நீராலும் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு தர்ப்பை புல், மலர் மாலைகள் சாற்றி சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.
இத்திருவிழா வரும் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.