தேசிய கைத்தறி தினத்தையொட்டி, கைவினைக் கலைஞர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நாட்டின் பாரம்பரியமிக்க கைத்தறித் துறையை எண்ணி பெருமைப்படுவதாகவும், கைவினைக் கலைஞர்களின் முயற்சியை போற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, உள்ளூர் பொருட்களுக்கு பொதுமக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.