டெல்லியில் போட்டித் தேர்வு பயிற்சி மைய தரைதளத்தில் மழை வெள்ளம் புகுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
டெல்லி பழைய ராஜேந்தர் நகர் பகுதியில் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மழை வெள்ளம் புகுந்து 3 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அந்தத் தேர்வு மைய இயக்குநர்களை போலீஸார் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சிபிஐ அதிகாரிகள் அதிகாரபூர்வமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.