தேசிய கைத்தறி தினத்தையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைத்தறி சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.
உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவு கூரும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் தேசிய கைத்தறி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைத்தறி சிறப்பு கண்காட்சியை ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.