நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த நிலையில், இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமமழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கியது. நிகழாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால், மழைக்காலக் கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பட்ஜெட் மீது காரசார விவாதம் நடைபெற்றது.
வரும் 12-ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைய இருந்த நிலையில், மக்களவையை தேதி குறிப்பிடாமல் அதன் தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
முன்னதாக மாநிலங்களவையில் வினேஷ் போகத் விவகாரம் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மைக் அணைக்கப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து அனல் பறக்க விவாதம் அரங்கேறியது. அமளிக்கு மத்தியில், மாநிலங்களவையை காலவரையின்றி அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஒத்திவைத்தார்.