இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்தை மறக்கமுடியாத மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
தனது சமூக வலைதள முகப்பு படத்தை மூவர்ண கொடியாக மாற்றியுள்ள பிரதமர் மோடி, இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்தை மீண்டும் ஒரு மறக்கமுடியாத இயக்கமாக மாற்றுவோம் என பதிவிட்டுள்ளார்.
நமது மூவர்ணக் கொடியைக் கொண்டாடுவதில் அனைவரும் தம்மோடு இணைய வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.