சுனிதாவை அழைத்து வரப்போவது யார்?
Mar 15, 2026, 03:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுனிதாவை அழைத்து வரப்போவது யார்?

Murugesan M by Murugesan M
Aug 10, 2024, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டுதான் பூமிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களில் முடிய வேண்டிய அவரது பயணம் நீண்டு கொண்டே செல்வது ஏன்? பூமிக்கு திரும்புவதில் என்ன சிக்கல்? விரிவாக பார்க்கலாம்.

இப்படி மகிழ்ச்சியோடு நடனமாடிக்கொண்டே சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த சுனிதா இப்போதும் அதே மனநிலையோடு இருக்கிறாரா என்று தெரியவில்லை.

58 வயதான சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்க கப்பற்படையின் விமானி மற்றும் விண்வெளி வீராங்கனை ஆவார். 2006-ஆம் ஆண்டு முதன்முறையாகவும் 2012-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் விண்வெளிக்கு சென்று திரும்பியிருக்கிறார் சுனிதா.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முயன்று வரும் நாசா, அதற்காக போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் எதிர்காலத்தில் மக்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. இவ்வளவு முக்கியமான பணியை சோதனை முயற்சி இல்லாமல் செய்ய முடியுமா?

அதனால் கடந்த ஜூன் 5-ஆம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி மையத்திலிருந்து மூத்த விண்வெளி வீரர் BUTCH WILMORE மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்ணுக்கு அனுப்பட்டனர். சில நாட்களில் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் எனக்கூறப்பட்டது.

ஆனால் இரண்டு மாதங்கள் கடந்த பிறகும் அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்திலேயே தங்கியுள்ளனர். இருவரையும் அழைத்துச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுதே அதற்கு காரணம்.

இதற்கிடையே வில்மோரும் சுனிதாவும் நலமாக இருப்பதாகவும் விண்கலத்தை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் நாசா மற்றும் போயிங் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் தற்போது கிடைத்திருக்கும் தகவல்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் இருவரும் விண்வெளி மையத்தை விட்டு புறப்படுவார்கள் என்றும் எதிர்வரும் புத்தாண்டை அங்கேயே வரவேற்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சூழலில் எலான் மஸ்க்கின் SPACE X நிறுவனத்துக்கு சொந்தமான DRAGON விண்கலம் செப்டம்பர் மாத இறுதியில் விண்ணுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. 4 பேர் பயணிக்கக்கூடிய டிராகன் விண்கலத்தில் இரண்டு வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்ல இருப்பதாகவும், சுனிதா, வில்மோர் உள்ளிட்டவர்களுக்கு தேவையான உணவு, உடை போன்றவற்றை அவர்கள் கொண்டு செல்லப்போவதாகவும் சொல்லப்படுகிறது.

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் DRAGON விண்கலம் பூமிக்கு திரும்பும்போது அதில் சுனிதாவும் வில்மோரும் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் அது போயிங் நிறுவனத்துக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

விண்வெளிக்குச் செல்லும் முன்பே ஸ்டார்லைனர் விண்கலத்தில் பழுது ஏற்பட்டதால் இரண்டு முறை பயணம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது விண்வெளிக்குச் சென்ற பிறகும் விண்கலம் பழுதடைந்ததோடு அதை சரிசெய்யவும் முடியவில்லை. ஒருவேளை பிரச்னை சரிசெய்யப்பட்டாலும் பூமிக்கு திரும்பும் வரை மீண்டும் பழுது ஏற்படாமல் இருக்க வேண்டும்.

வழியில் ஏதேனும் சிக்கல் உருவானால் அது விண்வெளி வீரர்களின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிவிடும். 2003-ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

Tags: Who will bring Sunita?
ShareTweetSendShare
Previous Post

வயநாட்டில் நிலச்சரிவு! : பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி!

Next Post

அமன் ஷெராவத் சாதித்தது எப்படி? : 10 மணி நேரத்தில் 4.6 கிலோ குறைப்பு

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies