காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நக் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், ராணுவத்தினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.