மண்டியிட்ட மாலத்தீவு! : வங்கதேசத்துக்கு இந்தியா சொல்லும் செய்தி என்ன?
Aug 25, 2025, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மண்டியிட்ட மாலத்தீவு! : வங்கதேசத்துக்கு இந்தியா சொல்லும் செய்தி என்ன?

Web Desk by Web Desk
Aug 13, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மாலத்தீவு பயணம், வெற்றிகரமான செய்தியை வழங்கி இருப்பதோடு, வங்க தேச அரசுக்கும் ஒரு செய்தியைத் தெரிவித்திருக்கிறது. அது என்ன என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

கடந்த வாரம் அரசுமுறை பயணமாக 2 நாட்கள் மாலத் தீவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவை மேம்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள். மேலும் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அப்துல்லா ஷாகித் உள்ளிட்ட பிற தலைவர்களையும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.

மாலத்தீவில் முகமது முய்சு மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து அந்நாட்டுடனான இந்தியாவின் உறவில் கடுமையான நெருக்கடிகள் ஏற்பட்டன. பதவியேற்ற சில மணி நேரங்களுக்குள், மாலத்தீவுக்கு இந்தியா வழங்கிய மூன்று விமான தளங்களை நிர்வகிக்கும் இந்திய இராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று உத்தரவிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக பொதுமக்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த சூழலில் தான், அதிபரும் அவரது அமைச்சர்களும், அரசு உயரதிகாரிகளும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தற்போது சிகப்பு கம்பள உற்சாக வரவேற்பு அளித்திருக்கின்றனர்.

தனது அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரான எதையும் மாலத்தீவில் அனுமதிக்க மாட்டோம் என்றும், மாலத்தீவின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வெளியுறவுக் கொள்கையை தான் பின்பற்றுவதாகவும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கூறி இருக்கிறார்.

மேலும் இந்தியா, மாலத்தீவின் நெருங்கிய மற்றும் முக்கியமான நட்பு நாடு என்று விவரித்த அதிபர் முகமது முய்சு, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் நெருங்கிய தொடர்புகளை வலுப்படுத்துவதில் தனது அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.

இந்தியாவே வெளியேறு என சீனாவின் குரலாக ஒலித்த மாலத்தீவு அதிபர் இப்போது ,இந்தியாவுக்கு ஆதரவு நிலை எடுத்திருப்பது, அந்நாட்டு அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப் படுகிறது.

மாலத்தீவின் முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல்லா ஷாகித் , அதிபர் முகமது முய்ஸு தலைமையிலான அரசு, இந்தியாவுடனான வெளியுறவுக் கொள்கையை உறுதிப்படுத்தி இருப்பதை வரவேற்று இருக்கிறார். மேலும், அவசர காலங்களில் இந்தியாதான் எப்போதும் முதலில் உதவி செய்யும் என்று மாலத்தீவு மக்கள் நம்புவதாகவும் தெரிவித்தார்.

ஏற்கெனவே, மாலத்தீவின் பட்ஜெட்டில் இருநூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான பற்றாக்குறை உள்ளது. 2026ம் ஆண்டில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மாலத்தீவு.

இதன் காரணமாக, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, துருக்கி, சீனா, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல நாடுகளின் நிதி உதவிக்கு முயற்சிசெய்த போதும், அந்த நாடுகள் எல்லாம் பொதுவாக சந்தை மதிப்பின் அடிப்படையில் வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கவே முன் வருகிறார்கள். கடன் வாங்கினால் மேலும் மாலத்தீவு மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரும் வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில், கடந்த மே மாதத்தில் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா, மாலத்தீவுக்கு வழங்கி இருக்கிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் மேலும் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க உள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மாலத்தீவுக்கு சீனா உள்ளிட்ட எந்த நாடுகளும் உதவ முன்வராத நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உதவி செய்து வருகிறது.

ஏற்கெனவே இலங்கை அரசியல் நெருக்கடி ஏற்பட்டு, பொருளாதார சிக்கல்களில் மாட்டிய நிலையில் இந்தியாதான் இலங்கைக்கு உதவியது. நேபாள நாடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய போதும் இந்தியா தான் உதவிக்கரம் தந்தது.

இப்போது, ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் வங்கதேசமும் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் மாலத்தீவு பயணம் , பிரதமர் மோடியின் தலைமையிலான மோடியின் இந்தியாவை சிறுமைப்படுத்த முடியாது என்றும், இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு இந்தியாவே சிறந்த பாதுகாவலன் என்றும் ஒரு முக்கிய செய்தியை வங்க தேசத்துக்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

Tags: Kneeling Maldives! : What is India's message to Bangladesh?
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் இஸ்கான் கோயில் மீதான தாக்குதலுக்கு விஎச்பி கண்டனம்!

Next Post

வெளிநாட்டினர் வெளியேற்றம்! : ட்ரம்பின் முடிவால் கமலாவுக்கு ஆதரவு?

Related News

முதல்முறையாக கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை – நிதியமைச்சகம் விளக்கம்!

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தராகண்ட் மாநிலங்களில் தொடர் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

வடமேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

நோயாளி இல்லாமல் இபிஎஸ் கூட்டத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ் – சரமாரி கேள்வி கேட்ட அதிமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

குறைந்த விலைக்கு கிடைக்கும் அனைத்து நாடுகளிடம் இருந்தும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வோம் – இந்தியா திட்டவட்டம்!

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தம் – மத்திய அரசு அறிவிப்பு!

மின்வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர் : தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

திருத்தணி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிறுத்தம் – நோயாளிகள் அவதி!

ராணுவத்திற்கு வலிமை சேர்க்கவுள்ள ‘சுதர்ஷன் சக்ரா’: சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

சங்கரன்கோவில் அருகே விசாரணை என்ற பெயரில் இளைஞரின் காலை உடைத்த போலீசார் – தொடரும் அத்துமீறல்!

விண்வெளியில் தனி ஆய்வு மையம் : மாதிரி வடிவமைப்பை வெளியிட்ட இஸ்ரோ – சிறப்பு தொகுப்பு!

பட்டப்படிப்பில் பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட படிப்புகளை அறிமுகப்படுத்தலாம் – யுஜிசி பரிந்துரை!

சபாநாயகர் பதவியின் கண்ணியத்தையும் மரியாதையையும் அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் – அமித் ஷா

தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலக்கும் அவல நிலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies