மண்டியிட்ட மாலத்தீவு! : வங்கதேசத்துக்கு இந்தியா சொல்லும் செய்தி என்ன?
Jul 24, 2026, 11:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மண்டியிட்ட மாலத்தீவு! : வங்கதேசத்துக்கு இந்தியா சொல்லும் செய்தி என்ன?

Murugesan M by Murugesan M
Aug 13, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மாலத்தீவு பயணம், வெற்றிகரமான செய்தியை வழங்கி இருப்பதோடு, வங்க தேச அரசுக்கும் ஒரு செய்தியைத் தெரிவித்திருக்கிறது. அது என்ன என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

கடந்த வாரம் அரசுமுறை பயணமாக 2 நாட்கள் மாலத் தீவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவை மேம்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள். மேலும் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அப்துல்லா ஷாகித் உள்ளிட்ட பிற தலைவர்களையும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.

மாலத்தீவில் முகமது முய்சு மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து அந்நாட்டுடனான இந்தியாவின் உறவில் கடுமையான நெருக்கடிகள் ஏற்பட்டன. பதவியேற்ற சில மணி நேரங்களுக்குள், மாலத்தீவுக்கு இந்தியா வழங்கிய மூன்று விமான தளங்களை நிர்வகிக்கும் இந்திய இராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று உத்தரவிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக பொதுமக்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த சூழலில் தான், அதிபரும் அவரது அமைச்சர்களும், அரசு உயரதிகாரிகளும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தற்போது சிகப்பு கம்பள உற்சாக வரவேற்பு அளித்திருக்கின்றனர்.

தனது அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரான எதையும் மாலத்தீவில் அனுமதிக்க மாட்டோம் என்றும், மாலத்தீவின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வெளியுறவுக் கொள்கையை தான் பின்பற்றுவதாகவும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கூறி இருக்கிறார்.

மேலும் இந்தியா, மாலத்தீவின் நெருங்கிய மற்றும் முக்கியமான நட்பு நாடு என்று விவரித்த அதிபர் முகமது முய்சு, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் நெருங்கிய தொடர்புகளை வலுப்படுத்துவதில் தனது அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.

இந்தியாவே வெளியேறு என சீனாவின் குரலாக ஒலித்த மாலத்தீவு அதிபர் இப்போது ,இந்தியாவுக்கு ஆதரவு நிலை எடுத்திருப்பது, அந்நாட்டு அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப் படுகிறது.

மாலத்தீவின் முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல்லா ஷாகித் , அதிபர் முகமது முய்ஸு தலைமையிலான அரசு, இந்தியாவுடனான வெளியுறவுக் கொள்கையை உறுதிப்படுத்தி இருப்பதை வரவேற்று இருக்கிறார். மேலும், அவசர காலங்களில் இந்தியாதான் எப்போதும் முதலில் உதவி செய்யும் என்று மாலத்தீவு மக்கள் நம்புவதாகவும் தெரிவித்தார்.

ஏற்கெனவே, மாலத்தீவின் பட்ஜெட்டில் இருநூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான பற்றாக்குறை உள்ளது. 2026ம் ஆண்டில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மாலத்தீவு.

இதன் காரணமாக, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, துருக்கி, சீனா, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல நாடுகளின் நிதி உதவிக்கு முயற்சிசெய்த போதும், அந்த நாடுகள் எல்லாம் பொதுவாக சந்தை மதிப்பின் அடிப்படையில் வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கவே முன் வருகிறார்கள். கடன் வாங்கினால் மேலும் மாலத்தீவு மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரும் வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில், கடந்த மே மாதத்தில் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா, மாலத்தீவுக்கு வழங்கி இருக்கிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் மேலும் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க உள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மாலத்தீவுக்கு சீனா உள்ளிட்ட எந்த நாடுகளும் உதவ முன்வராத நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உதவி செய்து வருகிறது.

ஏற்கெனவே இலங்கை அரசியல் நெருக்கடி ஏற்பட்டு, பொருளாதார சிக்கல்களில் மாட்டிய நிலையில் இந்தியாதான் இலங்கைக்கு உதவியது. நேபாள நாடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய போதும் இந்தியா தான் உதவிக்கரம் தந்தது.

இப்போது, ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் வங்கதேசமும் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் மாலத்தீவு பயணம் , பிரதமர் மோடியின் தலைமையிலான மோடியின் இந்தியாவை சிறுமைப்படுத்த முடியாது என்றும், இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு இந்தியாவே சிறந்த பாதுகாவலன் என்றும் ஒரு முக்கிய செய்தியை வங்க தேசத்துக்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

Tags: Kneeling Maldives! : What is India's message to Bangladesh?
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் இஸ்கான் கோயில் மீதான தாக்குதலுக்கு விஎச்பி கண்டனம்!

Next Post

வெளிநாட்டினர் வெளியேற்றம்! : ட்ரம்பின் முடிவால் கமலாவுக்கு ஆதரவு?

Related News

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies