சென்னை ஆவடியில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் 3 ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பணியாளர்கள் சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சுமார் அரை மணி நேரம் தாமதத்திற்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட நேர விரயத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
திருவள்ளுர் – சென்னை மார்க்கமாக ரயில்வே சிக்னல் கோளாறு அடிக்கடி ஏற்படுவது வாடிக்கையாகியுள்ள நிலையில், அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.