நாட்டின் 78- வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார்.
நாட்டின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ‘2047-ம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம்’ என்ற கருப்பொருளில் நடப்பாண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து டெல்லி செங்கோட்டை சென்ற பிரதமர் மோடியை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும் ராணுவ வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்ட பிரதமர் ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் செங்கோட்டையில் 11வது முறையாக தேசிய கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது ஹைலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ், கிரிராஜ் சிங் , முப்படை தளபதிகள் என பலரும் பங்கேற்றனர்.