2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், சுதந்திரத்திற்காக போராடிய 40 கோடி மக்கள் மூலம் இந்தியாவில் இருந்து காலனி ஆதிக்கம் முற்றிலும் அகற்றப்பட்டதாகவும், இன்று 140 கோடி மக்களாக உள்ளதாக கூறினார். நாட்டுக்காக உயிர்தியாக செய்தவர்களை போற்றுவோம் என்றும், அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாவும் பிரதமர் தெரிவித்தார்.
2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பொருளாதாரத்தில் 3வது நாடாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் என்றும் மோடி கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக, இயற்கை சீற்றத்தால், பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், சொத்துக்களையும் இழந்துள்ளதாகவும் தேசமும் இழப்புகளை சந்தித்துள்ளதகாக தெரிவித்த பிரதமர், இந்த நெருக்கடியான நேரத்தில் அவர்களுடன் துணை நிற்போம் என்றும் கூறினார்.
விண்வெளித் துறையில் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றுவதற்கு மிகவிம் அவசியம் என்றும் தெரிவித்தார்.2036 -ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதே இந்தியாவின் கனவு என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்..