தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
சுதந்திர தினத்தை ஒட்டி தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், அரியலூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, புதுக்கோட்டை ஆட்சியர் அருணா மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியா பங்கஜம் ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டனர்.
மூவர்ண பலூன்கள் மற்றும் வெள்ளை புறாக்களையும் பறக்க விட்ட ஆட்சியர்கள், நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.