திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது கனரக லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
கிரிசமுத்திரம் அடுத்த ரைஸ்மில் தெருவை சேர்ந்த விக்னேஷ், தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றுகொண்டிருந்தார்.
ஆம்பூர் அருகே சென்றபோது பின்னால் வந்துகொண்டிருந்த கனரக லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் விக்னேஷ் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.