பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
17 நாட்கள் உலகையே தன்பக்கம் ஈர்த்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் இந்தியா 71-ஆவது இடத்தைப் பிடித்தது.
இந்த நிலையில், சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் மற்றும் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் உள்ளிட்டோர் சந்தித்தனர். தொடர்ந்து வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அப்போது மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.